Posts

Showing posts from April, 2020

மழலை சொல் கேளீரோ

Image
புதிய ஜனனம் சூரியோதயம் பிறந்தது - விடியல் பிறந்தது மலர்மலர்ந்ததோ  -புதிதாக எனை காண  - குரல்கள் சுற்றிலும் சூழ புதிதாக ஜனனம் எடுத்தேனோ! கீச்சென்ற என் குரல் பூமிதனில் ஒலிக்கையிலே - உலகம் எனக்காகவே இப்போதுதான் பிறந்ததோ!  என் வரவை எதிர்பார்த்து அனைவரும் ஆனந்தமாய் வரவேற்க -யான் என்ன தவம் செய்தேனோ !குதூகலம் என்னுள் பொங்கிடவே பிஞ்சு கைகள் கால்களும் சிலம்பாட - கீச்சென்று நானோ குரல் எழுப்ப அணைத்த கைகள் தாயின் கைகள் அன்றோ! இதமான சூடு -இன்பமான அரவணைப்புக்குள்  நான் சிக்குண்டேன் சிக்குண்டேன் என் தாயே -என்ன தவம் செய்தேனோ! உன் வயிற்றில் மழலை என உதித்ததற்கு  நன்றி சொன்னேன் இறைவனுக்கு காலமெல்லாம்.. இந்த அன்பும் அரவணைப்பும் என்னுள் என்றென்றும் வேண்டும் என் தாயே - என்னுள் நீயும் உன்னுள் நானும் என இனிதே கலந்துவிட்டேன் என் தாயே!  என்னையே அறியாத வருடுகின்றேன் என் தாயின் கன்னத்திலே ..இனிது இனிது வாழ்க்கை இனிது அன்றோ!  Copy rights at balakshitha