Posts

Showing posts from November, 2019

15 11 2019 வெள்ளிக்கிழமை இந்த வாரத்திற்கான விசேஷமான தினங்கள்

Image
15-112019 வெள்ளிக்கிழமை  சங்கடகர சதுர்த்தி  விநாயகப் பெருமானுக்கு உகந்த தினம் . எந்த காரியத்தை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி தொடங்கில் ஜெயமாகும் .யானை முகத்தவனை நம்பினால் ஒரு குறையும் வராது என்று நம்பிக்கையோடு சங்கடகர சதுர்த்தியில் விநாயகப் பெருமானை வழிபடலாம் திருமண தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும்.  அன்றைய தினம் அருகம்புல் மாலையை விநாயகருக்கு சாற்றினால் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி மிகுந்த இனிய வாழ்க்கை தருவார் விநாயகப்பெருமான்.   17-11-2019 ஞாயிற்றுக்கிழமை தமிழ் மாதமான கார்த்திகை ஒன்றாம் தேதி -கார்த்திகை மாதத்திற்கு உள்ள சிறப்பு -இந்த மாதம் திருமணம் கைகூடும் மாதம் என்பதால் ஆவலோடு எதிர்பார்க்கும் அனைவருக்கும் நல்ல வரன் தேடி வரும் சிறப்பான மாதம்.  கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சித்தயோகம் 60 நாழிகை பஞ்சமி திதி யோடு சுப நாளும் சேர்ந்து வருவதால் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் விலகி -சுப செய்திகள் தேடிவரும்.  18-11-2019 திங்கட்கிழமை அன்று சோமவாரம்- கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங

8-11-2019 இந்த வாரத்திற்கான விரத தினங்கள்

Image
8--11 -2019 வெள்ளிக்கிழமை முதல் இந்த வாரம் முழுவதும் வரக்கூடிய விசேஷ தினங்கள்.. 9-11-2019 சனிக்கிழமைஅன்று சனி பிரதோஷம் 12-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று பௌர்ணமி 13-112019 புதன்கிழமை அன்று கிருத்திகை  நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை -சனி பிரதோஷம் சிவனுக்கான வழிபாடு -ஓம் சிவாய நமஹ எனும் மந்திரத்தை நாள்முழுதும் சொல்லியபடி விரதம் இருக்கக் கூடிய அற்புதமான தினம் சனிப்பிரதோஷம் .சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷம் மிக மிக சக்திவாய்ந்த பிரதோஷம் ஆகும். அன்றைய தினத்தில் ஓம் சிவாய நமஹ எனும் நாமத்தை உச்சரிப்பது  சிவபெருமானின் அபிஷேகத்திற்கு நம்மால் முடிந்த பால்- இளநீர் -தேன் கரும்புச்சாறு- சந்தனம் என வாங்கி கொடுக்கலாம் . அர்ச்சனைக்கு வில்வ இலை வாங்கி கொடுப்பது -நெய் விளக்கு ஏற்றுவது அருகம்புல் மாலை வில்வ மாலை நந்தீஸ்வரருக்கு சாற்றுவது -பச்சரிசி வெல்லம் கலந்த இனிப்பு அனைவருக்கும் கொடுப்பது- இவை நாம் அன்றையதினம் செய்யக்கூடிய செயல்கள் . அன்றைய தினத்தில் கோவிலுக்கு அவசியம் சென்று நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கிடையே சிவலிங்கத்தை தரிசிப்பது - மூன்று ஜென்ம பாவம் தீரும்.  நம்முடைய மனதில் இருக்கும்