உலக கோப்பை வென்ற இலங்கை தமிழ் பெண்கள்
அந்த ஆனந்தத்தோடு நாம் இங்கு கண்டு மனம் மகிழ்வது .. பிரான்சில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை முக ஒப்பனை போட்டியில் மூன்று இலங்கை தமிழ் பெண்கள் உலகக் கோப்பையை தட்டிச் சென்றுள்ளனர்
பிரான்ஸ் நாட்டில் உலக அளவிலான முக அழகு ஒப்பனை போட்டி நடைபெற்றது .உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான அழகு கலை நிபுணர்கள் பங்கேற்றனர் .இலங்கை சார்பாக போட்டியிட்ட கொழும்பை சேர்ந்த கயல்விழி -மாத்தறையை சேர்ந்த மையூரி -தீக்க்ஷினி என இலங்கை தமிழ் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த மூவருமே போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை தட்டிச் சென்றனர்.
ஆண்டவன் கொடுத்த அறிவை அடக்கி வைப்பது தவறன்றோ! குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது என்று இராது -பெண்கள் படைக்கும் சாதனை என்பது உலக அளவில் மேலோங்கி நிற்பது பெருமை தரக்கூடிய விஷயமே -வாழ்க்கையில் ஏதாவது ஒரு கலையை சாதித்தல் எனும் லட்சியம் இருக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும் எனும் லட்சியம் எழுந்துவிட்டால் மலையளவு சோதனை வந்தாலும் கடுகளவாக நினைத்து தகர்த்து -எழுந்து விட்டால் புகழின் ஏணிப்படி உச்சமும் நமதன்றோ!
அழகு எனும் கலைதனிலே ஆர்வம் கொண்டு கலந்துகொண்டு வெற்றிகரமாக வாகை சூடி உலகக் கோப்பை வென்ற கண்ணின் மணிகளுக்கு நம் வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment